Google Plus LinkedIn Email

Wednesday, May 18, 2011

அமீரகத் தமிழ் மன்றத்தில் மகளிர் தின விழா

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் பெண்கள் மட்டுமே பங்கு கொண்ட மகளிர் தின விழா நிகழ்ச்சி கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான தாமரை தலைமையில் துபாயில் வெகு சிறப்பாக அரங்கேறியது. மகளிர் பாடல் குழுவினரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் புதிய மெட்டில் குழந்தைகள் பாரதியார் பாடல்களைப் பாடினர். சியாமளா சிவகுமாரின் வரவேற்புரையை தொடர்ந்து பிரசித்தம் குழுவினர் வரவேற்பு நடனத்தை நிகழ்த்தினர். 'பெண் கல்வியின் அவசியத்தை' வலியுறுத்தி ரேணுகா குழுவினர், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வழங்கினர்.அதனைத் தொடர்ந்து நிவேதிதா ஆனந்தன் குழுவினரின் நடனமும், அமீரக மேடைகளில் முதன் முறையாக சிறுமியர் சிலம்பாட்டம் ஆடியதும் பார்வையாளர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. முன்னதாக கவிதா பிரசன்னா...

Tuesday, May 10, 2011

அபுதாபியில் தமிழ்ப் பு‌த்தாண்டு விழா

அபுதாபி : அபுதாபி தமிழ் மகளிர் வட்டத்தின் சார்பில் ஏப்ரல் 29ம் தேதியன்று 10வது ஆண்டாக தமிழ்ப் புத்தாண்டு விழா வெகு சிறப்பாகக் ‌கொண்டாடப்பட்டது. 10வது வருட தமிழ்ப் புத்தாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகத் தலைவி மீனா வெங்கடேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் மல்லிகா, செண்பகவல்லி, பானு, சுதா, விஜி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.   இந்திய சோஷியல் ஆடிட்டோரியத்தில் பாட்டு, ஓவியம், நடனம் மற்றும் சமையல் போட்டிகள் நடத்தப்பட்டது. அமீரகத்தில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ் மகளிருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு அபுதாபி தமிழ் மகளிர் வட்டத்தின் சார்பில் பரிசுகள் ...

Sunday, May 8, 2011

அன்னையர் தின வாழ்த்துக்கள்

என் கண்களில் நீ பாய்ச்சிய நம்பிக்கை ஒளி என் காதுகளில் நீ தந்த பேரானந்தப் பேச்சு என் மனமெங்கும் கறைபடாத உன் காட்சி என் உயிரெங்கும் நிரம்பி நின்ற உன்னாட்சி   என் வயிறாற நீ ஊட்டிய அமுதில் புது மிடுக்கு என் நடையது பெற்றது உன்னால் புது செருக்கு என் பேச்சினிலே நீ புகுத்திய தேன் இனிமை என் மூச்சினிலே தமிழ்த்தாயே உன் வலிமை   என் கைகள் கூப்பையிலே நீ ஒரு தெய்வம் என் கால்கள் விரைகையிலே நீ ஒரு ஆலயம் என் அங்கமெலாம் அன்பான நீ பெருந்தங்கம் என் ஆயுளெலாம் உன்னன்பே என் சொர்க்கம்!   அன்னையர் தின வாழ்த்துக்கள்! நன்றி :  மதிப்பிற்குரிய நண்பர் திரு பி. ச. கந்தநாதன் ...

துபாயில் ரத்ததான முகாம்

துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் ஆகியவை துபாய் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அல் வாஸல் மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமினை மே 06ம் தேதியன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வெகு சிறப்பாக நடத்தின. துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம்.ஸலாஹுத்தீன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், இதுபோன்ற சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்களைப் பாராட்டினார்.   துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் முன்னிலை வகித்தார். ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.முஹம்மது...

Page 1 of 3812345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons