Google Plus LinkedIn Email

Tuesday, March 29, 2011

Our Blog & Social Network Details Video

...

Friday, March 25, 2011

அபுதாபியில் இசை வடிவில் திருக்குறள்

அபுதாபி : பிரபல பின்னணி இசை அமைப்பாளர் பரத்வாஜ் தமிழ் பொதுமறை திருக்குறளுக்கு இசையமைக்கும் முயற்ச்சியில்.ஈடுபட்டுள்ளார். அவர் இசையமைத்து வரும் திருவள்ளுவரின் 1330 குரளுக்கும் உலகெங்கும் உள்ள 1330 பாடகர்களைக் கொண்டு பாடவைக்கும் ஒரு மாபெரும் முயற்ச்சியில் இறங்கி உள்ளார்.   இதன் முதற்கட்ட ஆயத்தப்பணிகளை அபுதாபி 'பாரதி நட்புக்காக' அமைப்புடன் இணைந்து கடந்த 10ம் தேதி தொடங்கியுள்ளார். அபுதாபி வந்திருந்த பரத்வாஜ்க்கு 'பாரதி நட்புக்காக' அமைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன்,செயலாளர் ஹலீல் ரஹ்மான், நிறுவனர் ஜெகன்னாதன் மற்றும் செயற்குழு அங்கத்தினர்களும் சிறப்பான முறையில் வரவேற்பளித்தனர், இந்தியத் தூதரகத்தைச சேர்ந்த டாக்டர் இளங்கோவன் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இசையமைத்ததுடன் பரத்வாஜ்க்கு...

Thursday, March 24, 2011

துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது

துபாய் : துபாய் அரசின் மின் துறையின் சார்பில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்காக வழங்கப்படும் விருதினை மார்ச் 10ம் தேதியன்று நடைபெற்ற விழாவில் தமிழக மருத்துவர் டாக்டர் முஹம்மது பர்வீன் பானுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. துபாய் அரசின் மின் துறையின் சார்பில் வருடந்தோறும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டுக்கான விருது பெற விண்ணப்பங்களை வரவேற்ற மின்துறை சுமார் 5000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் இருந்து சிறப்பான முறையில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்திய தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது பர்வீன் பானு, பொறியாளர் ஜாபர் அலி குடும்பத்தினர் விருது வழங்கி மின்துறை அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டனர்....

Tuesday, March 15, 2011

யு.ஏ.இ.,யில் விளையாட்டு போட்டி

அமீரக தமிழர்கள் சோர்வு நீக்கி, உற்சாகமும் ஊக்கமும் தரும் நோக்கத்துடன் பிப்ரவரி 4ம் தேதியன்று இறகுப்பந்து போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.   விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிகரமாய் பரிசுகளும் வழங்கி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. முதன் முறையாக, இறகுப்பந்து போட்டி பல பிரிவுகளாக நடத்தப் பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தது தமிழ்ச்சங்கம். ஆடவர் இரட்டை / பெண்கள் இரட்டை / கலப்பு இரட்டை என பகுக்கப்பட்டு, போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.பிப்ரவரி 3ம் தேதி பயிற்சி போட்டிகள் அமைக்கப்பட்டு, இரவு 9 மணி முதல் 12.30 மணி வரை நடை பெற்றன.   குழந்தைகளுக்கென பாசிங் த டாய், கொல கொலயா முந்திரிக்கா,...

துபாயில் இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பு கூட்ட‌ம்

துபாய் : துபாயில் இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பு கூட்ட‌ம் பிப்ரவரி 22ம் தேதியன்று இந்திய‌ க‌ன்சுலேட் ஆடிட்டோரிய‌த்தில் ந‌டைபெற்ற‌து. இந்திய‌ ச‌மூக‌ ந‌ல அமைப்பின் க‌ன்வீன‌ர் கே. குமார் துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார்.   இந்திய‌ க‌ன்சுல் ஜென‌ர‌ல் ச‌ஞ்ச‌ய் வ‌ர்மா நிக‌ழ்வுக்கு வ‌ருகை புரிந்த‌ துபாய் அர‌சின் ச‌மூக‌ முன்னேற்ற‌த் துறையின் டைர‌க்ட‌ர் ஜென‌ர‌ல் உள்ளிட்ட‌ அதிகாரிக‌ளை வ‌ர‌வேற்றார். துபாய் அர‌சின் ச‌மூக‌ முன்னேற்ற‌த்துறையின் டைர‌க்ட‌ர் ஜென‌ர‌ல் காலித் அல் க‌ம்தா, டாக்ட‌ர் ஒம‌ர் அல் முத்த‌ன்னா, டாக்ட‌ர் அஹ‌ம‌து அல் முஹைரி, ப‌ழ‌னி பாபு உள்ளிட்டோர் ச‌மூக‌ சேவை நிறுவ‌ன‌ங்க‌ள் துபாய் அர‌சில் ப‌திவு செய்து ச‌மூக‌ மாற்ற‌த்தில் அர‌சுட‌ன் இணைந்து ப‌ணியாற்ற‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தை வ‌லியுறுத்தின‌ர்....

துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெண்கள் தின விழா

துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெண்கள் தின விழா பிப்ரவரி 25ம் தேதி கொண்டாடப்பட்டது. ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் பெண்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது.   பெண்கள் தின விழாவையொட்டி சமையல், ரங்கோலி, மருதாணி, கலைநயமிக்க பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்காக ஓவியப்போட்டி மற்றும் வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன ...

துபாயில் கவிதைச் சிறப்பிதழ் வெளியீடு

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 48 வது மாத இதழான "இனி" சிறப்பிதழ் வெளியீடு மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சி மார்ச் 11, காலை 9-45 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைமைக் கழகப் பொதுச் செயலாளரும், இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியருமான பேராசிரியர், டாக்டர் சேமுமு முகமதலி, தாய் மண் வாசகர் வட்டம் அமைப்பின் தலைவர் செ.ரெ.பட்டிணம் மணி மற்றும் இலங்கையைச் சேர்ந்த காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களும் கலந்து கொண்டனர்.    ஜெயா பழனி, மற்றும் ஸ்ரீவாணி ஆனந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கிய விழா , இணைச்செயலாளர் ஜியாவுதீனின் வரவேற்புரையைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்...

Friday, March 11, 2011

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய இலக்கியம் மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய இலக்கியம் மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா பிப்ரவரி 25ம் தேதியன்று துபாய், தேராவில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் இரவு 6.30 மணிமுதல் 11. 30 மணிவரை சிறப்பாக நடந்தது.   விழாவின் ஆரம்பமாக துணைத்தலைவர் கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் கிராஅத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தாவூத் மற்றும் குழுவினரின் நபிவாழ்த்தைத் தொடர்ந்து துணைச்செயலாளர் அதிரை ஷர்புத்தீன் வரவேற்புரையாற்றினார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கவுரவித்தர் மு.மேத்தா, டாக்டர் சே.மு.மு.முகம்மதலி, டாக்டர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன், கலாபூஷணம் மானா மக்கீன், இலங்கைப்பிரபல பாடகி நூர்ஜஹான், ஈடிஏ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சையதுசலாஹுதீன் மற்றும் சீனாதானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்....

Monday, March 7, 2011

பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த விருதுநகர் இளைஞர்

விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்த சிவக்குமாருக்கும், பிலிப்பைன்ஸ் மரியா மெர்ஸிடஸ்க்கும் துபாயில் கனிந்த காதல், விருதுநகரில் திருமணத்தில் முடிந்தது. விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி தாமரை தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி.   இவரது மகன் சிவக்குமார்(29). பி.எஸ்சி., விசுவல் கம்யூனிகேசன் படித்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன் துபாயில் எலக்ட்ரிக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். இதே கடையில் பிலிப்பைன்சின் மணிலா நகரைச் சேர்ந்த மரியா மெர்ஸிடஸ் என்பவரும் வேலை செய்தார். அங்கு இருவருக்கும் காதல் ஏற்பட்டது.  தற்போது சிவக்குமார், துபாயில் வேறு நிறுவனத்தில் முதன்மை கட்டுப்பாட்டாளராகவும், மரியா மெர்ஸிடஸ் அங்குள்ள தனியார் விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை முதுநிலை அலுவலராகவும் பணி புரிகின்றனர்.  சமீபத்தில் அங்கு பதிவு திருமணம்...

Sunday, March 6, 2011

அபுதாபி அய்மான் ச‌ங்க‌த்தில் க‌ல்வியாள‌ருக்கு வ‌ர‌வேற்பு

அபுதாபி : அபுதாபி அய்மான் ச‌ங்க‌த்தின் சார்பில் த‌மிழ‌க‌த்தில் இருந்து வ‌ருகை புரிந்த‌ பேராசிரிய‌ர் முனைவ‌ர் சேமுமு முக‌ம‌த‌லிக்கு மார்ச் 03ம் தேதியன்று மாலை வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. முனைவ‌ர் சேமுமு முக‌ம‌த‌லி, அய்மான் ச‌ங்க‌ம் மேற்கொண்ட க‌ல்விச் சேவைக‌ளைப் பாராட்டினார். மேலும் திருச்சியில் பெண்க‌ளுக்காக‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ரும் க‌ல்லூரியின் ப‌ணிக‌ளையும் பாராட்டினார்.   இதுபோன்ற‌ சேவைக‌ள் ந‌டைபெறுவ‌த‌ற்கு உறுதுணையாக‌ இருந்து வ‌ரும் நிர்வாகிக‌ள் ம‌ற்றும் புர‌வ‌ல‌ர்க‌ளைப் பாராட்டினார். நிக‌ழ்வில் அய்மான் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அதிரை சாகுல் ஹ‌மீது, பொருளாள‌ர் முஹ‌ம்ம‌து ஜ‌மாலுதீன், ஈமான் ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்   Nandri : www.dinamalar.com...

Wednesday, March 2, 2011

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாய் : துபாயில் இலங்கையின் பிரபல எழுத்தாளர் மானாமக்கீன் நூல் அறிமுக நிகழ்ச்சி பிப்ரவரி 26ம் தேதியன்று மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஸ்கைசீ குரூப் இயக்குநர் செய்யது எம். அப்துல் காதர் (சினாதானா) தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் மானாமக்கீன்னின் கள ஆய்வுகள் குறித்தும், இலக்கியப் பங்களிப்பு குறித்தும் விவரித்தார்.   கீழை ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், தான் எழுதிய ' வரலாற்றில் வள்ளல் ஹபீப் முஹம்மது அரசர்', கீழக்கரைப் பண்பாட்டுக் கோலங்கள், வரலாற்றில் இலங்கை கண்ட குமரி, வரலாற்றில் இலங்கையும், காயல்பட்டினமும் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் குறித்து விவரித்தார். மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள காயல்பட்டணம், கீழக்கரை, முத்துப்பேட்டை,...

Page 1 of 3812345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons