Google Plus LinkedIn Email

Wednesday, November 2, 2011

4ம் தேதி துபாய் தமிழ்ச்சங்கத்தின் 10வது ஆண்டு விழா: லியோனி பட்டிமன்றம்

4ம் தேதி துபாய் தமிழ்ச்சங்கத்தின் 10வது ஆண்டு விழா: லியோனி பட்டிமன்றம் துபாய்: வரும் 4ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழா துபாய் இந்தியன் ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது. துபாய் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழா வரும் 4ம் தேதி நடக்கிறது. இந்த விழா துபாய் இந்தியன் ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது. மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையது எம். ஸலாஹுத்தீன், அனைத்திந்திய ஆயுர்வேத காங்கிரஸின் மதுரை பிரிவு தலைவர் டாக்டர் எஸ். தன்வந்த்ரி கார்த்திக் வேல் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையிலான...

Thursday, October 20, 2011

வாங்க வந்து கலக்குங்க எமது யாஹூ குழுமத்தில் (Mail to gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com)

வாங்க வந்து கலக்குங்க எமது யாஹூ குழுமத்தில் (Mail to gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com) ...

Tuesday, October 18, 2011

நண்பர் திரு. கந்தநாதன் அவர்களின் கவிதை

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் அமைப்பிலே வளைய வளைய வரும் செய்திகள் சுவையிலே   எளிதாய் பல விஷயங்கள் ஏறுதே என் மனத்திலே களிப்பாய் நாளும் அது கற்கண்டு நடை போடுதே!   விழிப்பைத் தரும் விஷயங்களும் பல இதிலுண்டு! வியப்பைத் தரும் பல செய்திகளும் இதிலடக்கம்!   மொழியைச் செப்பனிடும் முயற்சியும் இதிலுண்டு! முகத்தில் புன்சிரிப்பைத் தரும் கவர்ச்சியும் உண்டு!   நாட்டு நடப்புகளைப் பெட்டிக்குள் தரும் பொக்கிஷம் வீட்டுப் பயன்களை விந்தையாக்கும் விசித்திரம்!   மேடுபள்ளம் இதிலில்லை! பாலைநிலத்து முல்லை! வீட்டு நினைவுகூட இதனால் சமயத்தில் வருவதில்லை!   தமிழனென்ற உணர்வும் தமிழ்மொழியின் சிறப்பும் அமிழ்தமெனப் பொங்க அரபு நிலத்தில் நிலைக்க   இமியளவும் சுவையது...

Thursday, October 6, 2011

அக். 8ல் துபாயில் வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்

  துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் 'வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல்' எனும் சிறப்புக் கருத்தரங்கினை 08.10.2011 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு அல் முத்தீனா துபாய் இந்தியன் இஸ்லாமிக் செண்டர் அரங்கில் நடத்த இருக்கிறது என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் தெரிவித்தார்.   இக்கருத்தரஙகை குளோபல் சக்ஸஸ் சிஸ்டம்ஸ் இயக்குநரும், முதன்மை ஆலோசகருமான ஸ்ரீசித் ராதாகிருஷ்ணன் நடத்துகிறார்.   இக்கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் சையது முஹம்மது சாதிக் தலைமை வகிக்கிறார்.   கருத்தரங்கில் முன்னாள் மாணவர்கள் மட்டுமன்றி அனைவரும் பங்கேற்கலாம். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.   முன்பதிவு செய்திட 050-5489609/050-5356650 ஆகிய அலைபேசி...

Sunday, October 2, 2011

துபாயில் 2 ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

துபாயில் 2 ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடுதுபாய் உலக வர்த்தக மையத்தில் இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெகு சிறப்புற நடைபெற்று வருகிறது.இன்று 02.10.2011 அன்று காலை நடைபெற்ற துவக்க விழாவில் மாண்புமிகு மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அவர்கள் மாநாட்டினைத் துவக்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்தினார்.விழாவில் மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி, ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துல் ரஹ்மான் ( வேலூர் ), அழகிரி ( கடலூர் ), ராஜ்யசபா உறுப்பினர் ஜின்னா, மலேசிய துணைத் தூதர் சம்சுதீன்,தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சீத்தாரமன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன், இந்தியா கிளப்...

துபாய் தமிழ்ச் சங்கத்தில் காந்தி ஜெயந்தி விழா

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில் செப்டம்பர் 30ம் தேதியன்று ஷார்ஜா ரயான் சர்வதேசப் பள்ளியில் காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழா சிறப்புற நடத்தப்பட்டது. துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சிரியா மற்றும் விபீஷ் ஆகியோர் திருக்குறளை வாசித்து அதன் பொருளை விவரித்தனர்.காந்தியடிகள் குறித்து சுப்ரஜாவும், பாரதியார் குறித்து வசந்த்தும் சிற்றுரை வழங்கினர். பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். வரவேற்பு நடனத்தை இளவரசனின் மகள் வழங்கினார். சந்திரா குழுவினரின் கூட்டுப் பிரார்த்தனை இடம் பெற்றது. அதனைத் தொடந்து நடன ஆசிரியை கவிதா பிரசன்னாவின் வடிவமைப்பில் சிறுவர் நடனம், பாடல் நிகழ்ச்சி, வினாடி வினா, புதிய உறுப்பினர் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.நவம்பர் 4ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கத்தின்...

Friday, September 30, 2011

அபுதாபி தமிழ் சங்கத்தின் சார்பாக செப்டம்பர் 23ம் தேதியன்று ரத்த தான முகாம் நடைபெற்றது

அபுதாபி : அபுதாபி தமிழ் சங்கத்தின் சார்பாக செப்டம்பர் 23ம் தேதியன்று ரத்த தான முகாம் நடைபெற்றது அபுதாபியில் உள்ள கலிபா ரத்த வங்கியில் சங்கத்தின் இளைஞரணி சார்பில் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.முகாமிற்கு சங்கத்தின் தலைவர் ரெஜினால்டு சாம்சன் ஏற்பாடு செய்தார். மேலும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் ரத்த தானத்தின் நன்மைகளை பற்றி இளைஞர்களுக்கு எடுத்து கூறினார்கள். மேலும் அதிகமான தமிழ் அமைப்புகள் ரத்த தான முகாம் நடத்துவதை வெகுவாக பாராட்டினார்கள். - தினமலர் வாசகர் நிசார் அகமதுNandri. www.dinamalar....

Saturday, September 17, 2011

குழும நண்பர்கள் மற்றும் அமீரக தமிழர்களுக்கு அன்பு வேண்டுகோள்

**** நண்பர்கள் உடனடியாக செயல்படவும் -  URGENT FRIENDS ACT IMMEDIATELY ***** ஹலோ எஃப் 24 மணிநேர தமிழ் ஒலிபரப்பு என்று சொல்லி விட்டு தமிழின ஒழிப்பை முன்னிறுத்திய சிங்களவர்களின் பாடலுக்காக மூன்று மணி நேரம் ஒதுக்கும் ஹலோ எஃப் எம் சிங்களப் பாடல்களை ஒலிபரப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என அமீரகத் தமிழர்கள் இணைந்து குரல் கொடுப்போம். இந்தச் செய்தியை உலகத் தமிழர்கள் அனைவரும் உடனே உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் எதிர்ப்பை ரேடியோ ஹலோவின் முகநூல் பக்கத்திலும் மறக்காமல் பதிவு செய்யுங்கள். ...

Friday, September 16, 2011

NEWS UPDATES 17-09-2011

Dinamalar ஜாமின் கோரி கனிமொழி மீண்டும் மனு: அக்., 1ல் விசாரணை புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க., எம்.பி., கனிமொழி, டில்லி சிறப்பு கோர்ட்டில் நேற்று மீண்டும் ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமின் மனு, வரும் அக்டோபர் 1ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., அதிகாரிகள், இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகளை, கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இரண்டாவது குற்றப்பத்திரிகையில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' எம்.டி., சரத்குமார் ஆகியோரின் பெயர் இடம்பெற்றது.ஸ்பெக்ட்ரம் ... போக்குவரத்து துறைக்கு 7.79 கோடி ரூபாய் வருவாய் இழப்பு போக்குவரத்து துறையில், சட்டம், விதிமுறைகளை கடைபிடிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய், அரசுக்கு...

Wednesday, September 14, 2011

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமத்தில் இணைவது எளிது

அன்பு நண்பருக்கு,   வணக்கம்.   நமது முகபுத்தக நண்பர்களிடம் இருந்து "வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமம் (Gulf Tamil Nanbarkal Mail Group)"  எப்படி இணைவது என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பயுள்ளனர். நமது குழுமத்தில் இணைவது மிகவும் எளிது.   நண்பர்கள் கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினால் போதும்:   மின்னஞ்சல் வழியாக இணைவது:     01.     உங்களுடைய மின்னஞ்சலில் இருந்து gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com என்ற முகவரிக்கு ஒரு சிறிய மின்னஞ்சல் அனுப்புங்கள். 02.     உங்களுக்கு உடனே உங்களுடைய சந்தாவை உறுதிபடுத்த வேண்டி Yahoogroupsல் இருந்து ஒரு மின்னஞ்சல் வரும் (சில நேரங்களில் இந்த மின்னஞ்சல் உங்களுடைய <Spam Folder> போல்டருக்கு சென்றுவிடும். அதனால் <Spam...

Saturday, September 10, 2011

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்களின் மின்னணு நூலகம்

அன்பு நண்பருக்கு வணக்கம்,   Visit : http://www.box.com/gulftamilnanbarkal   நமது மின்னணு நூலகத்தில் தினம்தோறும் 400  முதல் 500 DOWNLOAD தரவிறக்கம் நடைபெறுகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகமான புத்தகங்கள் UPLOAD செய்ய இருக்கிறோம். நாங்கள் முன்பு சொன்னது போல இந்த நூலகத்தில் எங்களிடம் உள்ள புத்தகங்களையும் மற்றும் இணையத்தில் இருந்து கிடைத்தவற்றை தான் பதிவேற்றம் செய்து உள்ளோம். நமது நண்பர்கள் அவர் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை கேட்டு மின்னஞ்சல் அனுப்புகின்றனர். நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது,  அதே நேரத்தில் எங்களால் மட்டும் உங்கள் அனைவருடைய தேவையும் பூர்த்தி செய்ய முடியும் என்று நாங்கள் நம்பவில்லை.   ஆனால் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால்...

Monday, June 27, 2011

துபாயில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

துபாய்: துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) மற்றும் திருச்சி வெல்கேர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ஜூன் 12ம் தேதியன்று மாலை மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ரிக்கா லேண்ட்மார்க் ஹோட்டலில் வெகு சிறப்புற நடத்தின. மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி தலைமை தாங்கினார். ஏ.முஹம்மது தாஹா இறைவசனங்களை ஓதினார்.அஜ்மான் ஆரிஃபா குழும தலைவர் சுல்தானுல் ஆரிஃபின் முன்னிலை வகித்தார். ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். வெல்கேர் மருத்துவமனை குறித்த அறிமுகவுரையினை திருச்சி முஹம்மது கௌஸ் காஜா முஹைதீன் நிகழ்த்தினார்.   திருச்சி வெல்கேர் மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவர்...

துபாயில் த‌மிழ்ச்ச‌ங்க‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சார்பில் உறுப்பின‌ர்க‌ள் மாதாந்திர‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி ஜூன் 24ம் தேதியன்று மாலை ஷார்ஜா ரயான் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சிக்கு துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்தி மாலா சுரேஷ் த‌லைமை தாங்கினார். நிறுவ‌ன‌ப் புர‌வ‌ல‌ர் ஏ.லியாக்க‌த் அலி முன்னிலை வ‌கித்தார்.   பொதுச்செய‌லாள‌ர் சி.ஜெக‌ந்நாத‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். கும்ப‌கோண‌ம் அர‌சு க‌லைக்க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ த‌மிழ்த்துறைத் த‌லைவ‌ர் முனைவ‌ர் பேராசிரிய‌ர் மு.அ. முஹ‌ம்ம‌து உசேன் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் பாலைவ‌ன‌த்தில் ஒரு சோலையாக‌ த‌மிழ் ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஒருங்கிணைந்து ந‌ட‌த்தி வ‌ரும் இவ்விழாவில் ப‌ங்கேற்ப‌தில் பெருமித‌ம்...

Page 1 of 3812345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons