Wednesday, May 12, 2010
அமீரகத்தமிழர்கள் அமைப்பு பெருமையுடன் கொண்டாடும் உழைப்பாளர் தின விழா
Sunday, May 9, 2010
அபுதாபியில் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி
அபுதாபி : அபுதாபியில் ஏப்ரல் 30ம் தேதியன்று மேலப்பாளையம் பகுதியில் பிரிமியர் லீக்கின் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பரபரப்பான இறுதிச்சுற்று போட்டியில் இடிஏ மெல்கோ அணி, மேலப்பாளையம் எம்எம்சிசி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வின்னர் கோப்பையை தட்டிச் சென்றது. வின்னர் கோப்பையை அந்த அணியின் கேப்டன் ஜனாப் ஷேக்கிற்கு, ஜனாப் முகம்மது ரிஸ்வான் பிரைம் டெக் வழங்கினார். எம்எம்சிசி அணிக்கு ரன்னர் கோப்பை வழங்கப்பட்டது. ரன்னர் கோப்பையை எம்எம்சிசி அணியின் கேப்டன் காஜா ஈடிஏவிற்கு ஜனாப் முகம்மது ரிஸ்வான் பிரைம் டெக் வழங்கினார்.
அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு அரைசதங்கள் அடித்த மேலப்பாளையம் எம்எம்சிசி அணியின் காஜா முகைதீன் இந்தத் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஏ.தனஜயன், ஈடிஏ மெல்கோ மேனேஜர் சார்பில் மேலப்பாளையம் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஜனாப் தப்ரே ஆழம் பாதுஷா பரிசை வழங்கினார். மேலும் அதே அணியின் சிவராஜ் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சிறந்த பவுலராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எஸ்.கிருஷ்ணன், ஈடிஏ மெல்கோ துணை பொது மேலாளர் சார்பில் ஜனாப் செய்யது பரிசை வழங்கினார்.
விழா முடிவில் இந்த தொடரை சிறப்பாக நடத்திய ஜனாப் காஜாவிற்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் பங்குபெற்று சிறந்த ஒத்துழைப்பு அளித்த அனைத்து அணியினருக்கும் மற்றும் நடுவர்களுக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றிய ஈடிஏ மெல்கோ அணிக்கு மேலப்பாளையம் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா நிகழ்ச்சியை ஜனாப் இல்யாஸ் கமால் தொகுத்து வழங்கினார்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
Nandri : www.dinamalar.
Tuesday, May 4, 2010
Sunday, May 2, 2010
வாழ்த்தி ,விடை கொடுங்கள் சகோதரர்களே..
படித்து முடித்து
பறக்க துடித்து,
சிறகொடிந்து வீழ்ந்த காலம்..
பறக்க துடித்து ,
இறக்க துணிந்து ,
ஈராக் வந்த காலம் ...
பயந்து,பயந்து
பணத்திற்காக
உழைக்கும் கோலம்,...!
உற்று பார்த்தால்,
உணரும் இதன்
கோரம்...!
சொந்த வீடு
காலம் முழுதும் களித்திருக்க ,
கவலை மறந்து கண்ணுறங்க ,
கட்ட வேண்டும் சொந்த வீடு...!
கல்லாலான கட்டிடமாய் அல்ல ,
மனங்கள் மணம் கமழும் மனையாக வேண்டுமது ...!
சந்தோழ சன்னதியது...!
அனைவரும் அமர வேண்டும் ,ஒரு இடம்..
சமைப்பதோடு ,சாப்பிடவும் வேண்டும் ,ஒரு அறை..
படுத்தவுடன் உறக்கம் வர வேண்டும் ,ஒரு அறை..
அனைத்து அறைக்கும்,பொது அறையாய் வேண்டும் ,கழிவறை ...
வாசலோடு ,வாகனத்திற்கும் வேண்டும் ,ஒரு நிழல் ..
நிழல் தந்த இறைவனுக்கும் நீங்கா இடம் வேண்டும் ..,
சிறு வீடானாலும் ,சிறப்பாக அமைய வேண்டும் ..
அதனையும் ,அழகுடனே அமைக்க வேண்டும் ...!
நினைத்தபடி அமையாவிட்டால் ,அதை ஏற்கும் மனம் வேண்டும் ..
அனைத்திற்கும் அந்த இறைவன்தான்
அருள வேண்டும்.....!
இரை தேடி பறந்த பறவைகள்
இரவில் கூடும் கூட்டில் ,
பணம் தேடி பறந்த நாமோ
ஒரு நாள் கூடுவோம் ,
தாய் தமிழ் நாட்டில்...!
அன்புடன் ,
சொந்த ஊர் செல்லும் கனவில் மிதக்கும் ,
ராஜேஷ் பாலா ...