Google Plus LinkedIn Email

Saturday, February 26, 2011

ஜெத்தாவில் குழந்தைகள் நிகழ்ச்சி

ஜெத்தா : இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அமைந்துள்ள ஜெத்தா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த குழந்தைகளுக்கான நிகழ்ச்சி பிப்ரவரி 17ம் தேதியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. திருக்குரானிலிருந்து இறை வசனத்துடன் தொடங்கி, திருக்குறளிலிருந்து குறட்பாக்கள் சொல்லப்பட்டு, சவுதி மற்றும் இந்திய தேசிய கீதங்களுடன் நிகழ்ச்சி களைகட்ட துவங்கியது.

 

வரவேற்புரைக்குப் பின் கடைசி வரையிலும் குழந்தைகள் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் வந்திருந்த அனைவரையும் பிரமிக்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் இந்திய துணை தூதரக அதிகாரி மூர்த்தி, தமிழக ஹஜ் குழுமத்தின் துணை தலைவர் அபுபக்கர் மற்றும் மருத்துவர் கரிமுதீன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கரிமுதீன் மற்றும் சிராஜூதீன் ஆகியோருக்கு நினைவுக் கேடயம் அளிக்கப்பட்டது.

 

வழக்கத்திற்கு மாறாக, ஆடல் பாடல் என்று எதுவும் இல்லாமல், குழந்தைகளின் நினைவாற்றல், சமயோசிதமாக யூகிக்கும் திறன், தனித் திறமைகளை வெளிப்படுத்துதல், நாவைக்குழற வைக்கும் சொற்றொடர்களை பிழை இல்லாமல் திரும்பச் சொல்லுதல் , மாறு வேடமிட்டு நல்ல கருத்துக்களை சொல்லுதல் போன்ற பல போட்டிகளில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.

 

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஜாவித், ஸ்ரீகணேஷ், முரளி, குணசேகரன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இரவு உணவுக்குப் பின்னரும் நிகழ்ச்சி தொடர்ந்தது.இறுதியாக நன்றியுரை வாசிக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்று வந்திருந்த அனைவரும் மன நிறைவோடு வீடு திரும்பினர்.

 

தினமலர் வாசகர் சிராஜ்

Thursday, February 24, 2011

தமிழறிஞர்களுக்கு வரவேற்பு

துபாய்: துபாயில் பன்னாட்டு இஸ்லாமியக் கழகத்தின் இலக்கிய விழாவில் பங்கேற்க வருகை புரிந்த தமிழறிஞர்களுக்கு பிப்ரவரி 25ம் தேதியன்று அதிகாலை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான முனைவர் சேமுமு.முஹமதலி, பாடலாசிரியர் மு.மேத்தா ஆகியோர் இலக்கிய விழாவில் பங்கேற்க வருகை புரிந்தனர்.

 

இவ்வரவேற்பு நிகழ்வில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகக் கிளை நிர்வாகிகள் திருவிடச்சேரி எஸ்.எம்.ஃபாரூக், கிளியனூர் இஸ்மத், கீழை ராஜா, அதிரை ஷர்புதீன், இனிய திசைகள் அமீரகப் பிரதிநிதி முதுவை ஹிதாயத், திருச்சி சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

NANDRI : WWW.DINAMALAR.COM

 

துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவரான கார்த்திக்கின் பாடல் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவரான கார்த்திக்கின் பாடல் நிகழ்ச்சி பிப்ரவரி 19ம் தேதியன்று மாலை அஸ்டோரியா ஹோட்டலில் நடைபெற்றது. 14 வயது மனநலம் குன்றிய தமிழக மாணவர் கார்த்திக். இசையின் மூலம் பல இதயங்களை கவர்ந்து வருகிறார். கீ போர்டு வாசிக்கும் பயிற்சி பெற்றுள்ளார். சுமார் 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை மனனம் செய்து வைத்துள்ளார்.

 

இந்நிகழ்வில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தனது துணைவியாருடன் நிகழ்ச்சியின் இறுதி வரை இருந்து கார்த்திக்கின் திறனைக் கண்டு வியந்தார். இது போன்றவர்களை நாம் அனைவரும் உற்சாகப்படுத்தி ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிகழ்வினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த இந்திய சமூக நலக் கமிட்டியின் தலைவர் கே.குமாரையும் பாராட்டினார். இந்திய, பாகிஸ்தானியப் பாடல்கள், பாப், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு பாடல்களைப் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

 

இதுமட்டுமல்லாது சிறப்புக் குழந்தைகளுக்கான சமூக நல அமைப்பான சாதி, துபாய் கைராலி கலா மன்றம், பல்வேறு தமிழ் மற்றும் கேரள அமைப்புகள், 94.7 எஃப்.எம். உள்ளிட்டவற்றிலும் பாடல்களைப் பாடியுள்ளார். கார்த்திக்கின் பள்ளியிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த கலை நிறுவன விருதுக்காக பாடல் அனுப்பப்பட்டிருந்தது.

 

எனினும் அமெரிக்கா செல்ல இயலாத சூழலினால் அது கைகூடவில்லை. கார்த்திக்கின் சகோதரர் விக்னேசும், அவரது பெற்றோர்களும், பாட்டியும் பெரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

Nandri : www.dinamalar.com – NRI NEWS

பிப்ரவரி 25, துபாயில் பெண்கள் தின விழா

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெண்கள் தின விழா பிப்ரவரி 25ம் தேதியன்று மாலை ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தெரிவித்துள்ளார். பெண்கள் தின விழாவையொட்டி சமையல், ரங்கோலி, ஹென்னா, கலைநயமிக்க பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்பட இருக்கிறது.

 

மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்காக ஓவியப்போட்டி மற்றும் வண்ணம் தீட்டுதல் ஆகியனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் பங்கு பெற விரும்புவோர் வெள்ளிக்கிழமை மாலை 3.30 க்குள் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 050 2118775 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

துபாயில் அமீரக நகைச்சுவை மன்ற ஆண்டு விழா

துபாய் : துபாயில் அமீரக நகைச்சுவை மன்றத்தின் இரண்டாம் ஆண்டு விழா பிப்ரவரி 21ம் தேதியன்று மாலை கராமா சென்டரில் நடைபெற்றது. ஜுனியர் எஸ்.பி.பி., என அழைக்கப்படும் ராபர்ட், பல குரல் நாயகன் ராஜாராம், மிமிக்ரி மாஸ்டர் படவா கோபி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினர்.

 

அமீரக நகைச்சுவை மன்ற அங்கத்தினர்களின் வளமையான நகைச்சுவை துணுக்குகளும் இடம்பெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை அமீரக நகைச்சுவை மன்ற நிறுவனர் குணா, தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க மாத நிகழ்ச்சி

துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் பிப்ரவரி மாத நிகழ்ச்சி இந்தியா கிளப் தர்பார் ஹாலில் பிப்ரவரி 18ம் தேதியன்று மாலை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை அனுகிரஹா வேணுகோபால் பாட, துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாதன் வரவேற்புரை வழங்கினார். இந்திய குடியரசு தினத்தை நினைவு கூறும் விதமாக ஸ்வேதா கிருஷ்ணன் வடிவமைத்த சின்னப்பெண்களின் வண்ணமிகு நடனம் தேசப்பற்றை ஊட்டுவதாக அமைந்திருந்தது.

 

ரத்திக் துராசத், ரொபினா துராசத் ஆகியோர் குறள் சொல்லும் நேரத்தில் திருக்குறளைக் கூறி அதன் விளக்கத்தை அளித்தனர். சங்கர் நாராயணன், சொத்து பாதுகாப்பு குறித்த விளக்கவுரை நிகழ்த்தினார். சுஜாதா விஸ்வநாத் வடிவமைத்த நகைச்சுவை குறு நாடகம், ஸ்ரீரங்க நாச்சியார் அசோக்குமார் மற்றும் இந்து பத்மநாதன் ஆகியோர் வடிவமைத்த நடன நிகழ்ச்சி, ஸ்ரீராமின் பிம்பங்கள் கவிதை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மீனாகுமாரி பத்மநாதன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். உஷா கிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினார்.

 நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

Wednesday, February 23, 2011

பிப்ரவரி 25, துபாயில் இலக்கிய விழா

துபாய் : துபாயில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகக் கிளை நடத்தும் இலக்கிய விழா மற்றும் பரிசளிப்பு விழா பிப்ரவரி 25ம் தேதியன்று மாலை ஆறு மணிக்கு அல் நாசர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு தமிழ்ச்சங்க துணைத்தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளரும், இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியருமான முனைவர் சேமுமு முகமதலி, பாடலாசிரியர் மு.மேத்தா, இலங்கை எழுத்தாளர் கலாபூஷணம் மானா மக்கீன், இலங்கை இஸ்லாமியப் பாடகி நூர்ஜஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு 055 – 976 00 94 என்ற ‌எண்களில் தொடர்பு கொள்ளவும்.

 

Nandri : www.dinamalar.com

 

குவைத்தில் ரத்த தான முகாம்

குவைத் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் தனது ஐந்தாவது இரத்த தான முகாமை பிப்ரவரி 18ம் தேதியன்று ஒரு பெரும் சாதனையோடு நடத்தி முடித்திருக்கிறது. குவைத் ரத்த வங்கி துவங்கியது முதல் இன்று வரை ஒரே நாளில் ஒரே அமைப்பை சேர்ந்த எவரும் இத்தனை எண்ணிக்கையில் ரத்தம் கொடுத்தது இல்லை என்பதே அந்த சாதனை. மதியம் ஒரு மணி முதல் ஏழு மணி வரை நடந்த முகாமில் பெண்கள் மற்றும் 20 முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் உட்பட 540 பேர் வருகைத் தந்தாலும் 330 பேர் வரை தான் பதிவு செய்யவே முடிந்தது. அந்த 330 பேரிலும் இரவு ஏழு மணிவரை 284 பேர் மட்டுமே ரத்தம் கொடுக்க முடிந்தது. மற்றவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பியது வருத்தம் அளித்தாலும் இவ்வளவு எண்ணிக்கையில் சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டதும் குவைத் மத்திய இரத்த வங்கியில் இத்தனை பேர் ஒரே நாளில் இரத்தம் வழங்கியது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்று சந்தோசத்தோடு அதன் ஊழியர்கள் சகோதரி நபியா சாஹர், ஆயிஷா அஹமத், அன்வர் அல் உமிசாத் நம்மோடு பகிர்ந்துக் கொண்டதும் நம்மை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.நிகழ்ச்சி ஏற்பாட்டை மண்டல நிர்வாகத்தின் கீழ் மண்டல மருத்துவ அணி பொறுப்பாளர் சகோ முஹம்மது சித்திக்கின் தலைமையில் சகோதரர்கள் ஹாஜா, அப்பாஸ்,சர்புதீன்,ஜியாவுதீன்,ரியாஸ்,சாகுல் ஹமீத் மற்றும் நம் கிளை சகோதரர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தினர்.

துபாயில் இளையான்குடி வட்டார ஜமாஅத்தினரின் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி

துபாய்: துபாயில் இளையான்குடி வட்டார ஜமாஅத்தினரின் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற்றது. வாவணன் முஹம்மது முக்தார் இறைவசனங்களை ஓதினார். அப்துல் பாசித் வரவேற்றார். அப்துல் காதர் தலைமையுரை நிகழ்த்தினார். பறக்கத்தாபாத் மஸ்ஜித் தாருஸ் ஸலாம் இமாம் மௌலவி ஏ.ஹெச். அப்துல் ஹக்கீம் ஆலிம் ஜமாலி, அஹமது கபீர், துபாய் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழக துணைத்தலைவர் கொடுங்கையூர் எம்.முஹைதீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.<BR>அடமங்குடி அப்துல் ரஹ்மான் தீனிசைப் பாடல் பாடினார். பஷீர் அஹமது, அப்தாஹிர், சுல்தான், பைசல், அமானுல்ல்லாஹ் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். ஊர் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வினை அப்துல் நாசர் தொகுத்து வழங்கினார். பெண்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பான மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 

Nandri : www.dinamalar.com

 

Sunday, February 20, 2011

அபுதாபி அய்மான் சங்கம் ந‌ட‌த்திய‌ மீலாதுப் பெருவிழா

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத் தலைநகரான அபுதாபியில் அய்மான் சங்கத்தின் சார்பில் மாபெரும் மீலாது விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அய்மான் சங்கத் தலைவர் அதிராம்பட்டிணம் அல்ஹாஜ்.ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார். மெளலவி சீனி முஹம்மது மஹ்ள‌ரி இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்றார். அய்மான் கல்லூரியின் துணைத் தலைவர் களமருதூர் அல்ஹாஜ்.ஷம்சுத்தீன், பனியாஸ் பில்டிங் பெட்டீரியல்ஸ் நிறுவன அதிபர் அல்ஹாஜ்.அப்துல் ஹமீது மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் காதர் அலி இஸ்லாமிய கீதம் பாடினார்.

 

அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா,மெளலவி ஹபீபுர் ரஹ்மான் மஹ்லரி ஆகியோர் துவக்கவுரை நிகழ்த்தினர். அய்மான் மகளிர் கலூரியின் பொருளாளர் அல்ஹாஜ் செய்யது ஜாஃபர் கல்லூரியின் நிகழ்வு அறிக்கையை சமர்ப்பித்தார். காயல்பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் அரபிக் கல்லூரியின் முதல்வர் மெளலவி அல்ஹாஜ்.அஹ்மது அப்துல் காதர் மஹ்லரி, வத்தலகுண்டு கன்ஜுர் ரஷாத் அரபிக் கல்லூரி முதல்வர் மெளலவி அல்ஹாஜ்.ஷம்சுல் ஹுதா ரஷாதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்

 

துபை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,காயல் யஹ்யா முஹையத்தீன், முதுவை ஹிதாயத்,அமீரக காயிதெமில்லத் பேரவை துணைத் த‌லைவ‌ர் காயல் நூஹு சாஹிப் மற்றும் பலர் பங்கேற்றனர். அய்மான் சங்க செயலாளர் எரவாஞ்சேரி முஹம்மது இக்பால் நன்றி கூறினார். அய்மான் சங்க துணைத்தலைவர் ஆடூர் அல்ஹாஜ்.குத்புதீன், பொருளாளர் கீழக்கரை ஜமால்,செயலாளர்கள் களமருதூர் ஷர்ஃபுத்தீன்,திருவாடுதுறை அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

Thursday, February 17, 2011

குவைத் காயிதே மில்லத் பேரவை சிறப்புக் கூட்டம்



குவைத்: குவைத் காயிதே மில்லத் பேரவை சிறப்புக் கூட்டம் குவைத் மிர்காப் தஞ்சை ஹோட்டலில் சிராஜீல் மில்லத் அரங்கில் காயிதே மில்லத் பேரவை குவைத் சார்பாக புதிய நிர்வாகிகள், உறுப்பினர்கள்அடையாள அட்டை வழங்குதல், கலந்துரையாடல் நிகழ்வுகள் கூட்டம் நடைபெற்றது.

பேரவை தலைவர் முஹம்மது பந்தூர் ஆர்.எம்.முஹம்மது பாருக் தலைமை தாங்கினார். மார்க்கப் பிரிவு செயலாளர் வல்லம் நாசர் சாதிக் ரப்பானி கிராத் ஒதி தொடங்கி வைத்தார். திருமங்கலக்குடி அப்துற்ரஹிம் வரவேற்றார். பேரவை ஆலோசகர் கூத்தாநல்லுர் என்.ஏ.எம்.அப்துல் அலிம், டி.வி.எஸ்.அலாவுதின் ஆகியோர் பேசினர்.

முஸ்லிம் லீக் மாநில மாநாட்டு தீர்மானங்கள் மற்றும் மஹல்லா ஜமாத் மாநாட்டு தீர்மானங்களை இணைச்செயலாளர் சத்திரமனை ஹஸன் முஹம்மது வாசித்தார். பேரவையின் புதிய ஆலோசகர்கள் அறிமுகத்தை தொடர்ந்து, உறுப்பினர்கள் அடையாள அட்டையை பேரவையின் ஆலோசகர் மற்றும் தலைவர் வழங்கினர்.

இணைச் செயலாளர் ஹஸன் முஹம்மது நன்றி கூறினார். பேரவை பெருளாளர் காரைக்கால் எஸ்.எம்.ஆரீப் மரைக்காயர் கூட்ட நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். கூட்டம் மஜ்லிஸ் துவாவுடன் இனிதே நிறைவுற்றது

nandri www.dinamalar.com

Tuesday, February 15, 2011

யுஏஇ தமிழ்ச் சங்கத்தின் பயணத்தில் இன்னொரு வெற்றியின் மைல் கல்

சார்ஜா: அமீரக மண்ணில் நம் மக்களுக்கு, அவர்தம் சோர்வு நீக்கி, உற்சாகமும் ஊக்கமும் தரும் நோக்கத்துடன் பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. முதன் முறையாக, இறகுப்பந்து போட்டி பல பிரிவுகளாக நடத்தப் பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தது தமிழ்ச்சங்கம். அன்றைய தினத்திலேயே, முக வண்ணம் பூசி, குழந்தைகளையும், பெரியவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

ஆடவர் இரட்டை, பெண்கள் இரட்டை, கலப்பு இரட்டை என பகுக்கப்பட்டு, போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக பயிற்சி போட்டிகள் நடை பெற்றன. மல்லிகார்ஜூன், கீதா, ஸ்ரீராம், காமாட்சி ஆகியோர் விளையாட்டை ஒருங்கிணைத்து நடத்தினர். இவர்களுக்கு துணையாக பிரபு, மாரீஸ்வரி பிரபு, பாலகிருஷ்ணன், சாகுல் அகமது, அண்டனி நிக்சன் செயலாற்றினர்.

 

முக வண்ணம் பூசும் நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு பெற்று மகிழ்ந்தனர். ஷோபன், ஜமுனா ஷோபன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.குழந்தைகளுக்கென பாசிங் த டாய், கொல கொலயா முந்திரிக்கா, தொடர் ஓட்டம், வண்ணங்கள், வேடிக்கை இறகுப் பந்து, கொகோ என 2 வயது முதல் 15 வயது வரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

15 வயதிற்கு மேற்பட்டோருக்கு, மிதவேக நடை, அடுத்தவனை அலேக்கா தூக்கு, குதியாட்டம், கொகோ என நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான 15 வயதிற்கு மேற் பட்டோருக்கு குப்பி நிரப்புதல், குவளை பாலன்சிங், பந்து எரிதல், பிஸ்கட் தின்னுதல் மற்றும் கொகோ என, ஸ்ரீரங்கா ரமேஷ், சித்ரா பிராஸ்பர் ஆகியோரால் நடத்தப்பட்டது. இவர்களுக்கு பத்மராஜ், அருண் குமார் துணையாக இருந்தனர். சவும்யா, கோகிலா, கீதா சுவாமிநாதன், விஜயா, காயத்ரி, அனிதா முத்து, நந்தகுமார், மகாதீர், கார்த்திகேயன், ஸ்ரீமான், ரவி, ராம்குமார் ஒருங்கிணைப்பில் துணையாக இருந்‌தனர்.

 

 யுஏஇ யிலிருந்து லாரன்ஸ் பிரபு, ரமேஷ் விஸ்வநாதன்

Sunday, February 13, 2011

AL Noor Annual Fun Fair (SPECIAL NEEDS CHILDREN's CARNIVAL)

Vanakkam. Good day.

AL Noor Annual Fun Fair (SPECIAL NEEDS CHILDREN's CARNIVAL) "Free Entry"

DATE : 25TH FEBRUARY 2011
VENUE : AL NOOR TRAINING CENTRE, BEHIND MALL OF THE EMIRATES, AL BARSHA
Location Map : please visit - http://www.uaetamilsangam.com/upcomingevent.asp
Time: 10:00 AM TO 10:00 PM

Flea Market (You can donate and buy goods)
Mehendi & Face Painting (Should bring own Mehendi Cone and Face Painting Colours - Volunteers most welcome)
Lots of fun filled games for all ages

Please cancel all your appointments and other programs, requesting you & your family to spend time for the Special Needs Children. The children are not expecting anything except our Support and Prayers. I am sure you will not miss such a great opportunity, I am sure you will join us on 25th February 2011 to bless the children.

We need Volunteers Male from 7.30am to arrange the benches / chairs / stalls etc.,. Women Volunteers from 9.30am (To Invite, Arrange, Coordinate Games, Sports, Mehendi, Face Painting etc.,)

We expect your attendance and cooperation with our fail For more details contact +971 50 5865375.

Al Noor Training Centre for Children with Special Needs opened its doors in Dubai on November 21, 1981, starting with only eight children. The Centre serves children with special needs from different nationalities and can accommodate up to 300 children in the new facility. The purpose-built facility opened its doors in April 2007 and was officially inaugurated on November 04, 2007 by HRH Princess Haya Bint Al Hussein, Wife of His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice President and Prime Minister of the U.A.E. and Ruler of Dubai.

The Centre has been generously donated by His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice President and Prime Minister of the U.A.E. and Ruler of Dubai and was made possible through the benefaction of HRH Princess Haya Bint Al Hussein.


Thanks and Regards
Ramesh Viswanathan
UAE Tamil Sangam

நடந்த கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா

ரியாத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி ரியாத் நகரிலுள்ள பத்தாவில் அன்று நடைபெற்றது. ரியாத் மண்டல தலைவர் நிஜாம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் பஷீர் மவுலவி, ரியாத் மண்டல துணை தலைவர் பஷீர் மவுலவி, இலங்கையை சேர்ந்த ரில்வான் மவுலவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 

போட்டியில் முதல் பரிசு பெற்ற தம்மாமை சேர்ந்த அபு ரய்யானுக்கு மினி லேப்டாப், இரண்டாவது பரிசு பெற்ற அலாவுதீனுக்கு அரைபவுன் தங்க காசு, மூன்றாவது பரிசு பெற்ற ஜூல்ஃபியை சேர்ந்த சித்தீக்கிற்கு மொபைல் போன் பரிசாக வழங்கபப்ட்டது.

 

ஐந்து பேருக்கு ஆறுதல் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. மண்டல இணை செயலாளர் அப்துல் ரஹ்மான் நவ்லக் நன்றி கூறினார்.

துபாயில் ‘தமிழ்த்தேர்’ மாத இதழ் முதல் அச்சுப் பிரதி வெளியீட்டு விழா

துபாய்: துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாத இதழான 'தமிழ்த்தேர்' துவங்கி பிரதியெடுத்து வெளியிடப்பட்டு வந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக அச்சில் வெளிவரும் நிகழ்வு விழாவாக துபாய் கனடியன் பல்கலைக்கழக அரங்கில் நடத்தப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முஸ்தஃபா, குவைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலா என்கிற பாலசுப்ரமணியன் கலந்துகொண்டனர்.

 

ஆனிஷா பானுவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவை கீழை ராஸா பாரதியின் பாடலோடு தொகுத்து வழங்கினார். நிவேதிதாவின் வரவேற்பு நடனம், துபாய் நகைச்சுவை மன்றத்தைச் சேர்ந்த ரமணி, நெல்லை நகைச்சுவைத் துணுக்குகள், ஸ்ரீவித்யா கிருஷ்ணகுமார் கீபோர்டு ஆகியவை இடம் பெற்றன. இதனைத் தொடர்ந்து வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேரின் 4 ஆண்டுகாலம் கடந்து வந்த பாதை காணொளியாக திரையில் வெளியிடப்பட்டது. அடுத்து வானலைவளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், அஜ்மான் அமீரகத் தமிழர் அமைப்பின் தலைவர் டாக்டர் மூர்த்தி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். வானலை வளர்தமிழ் ஆலோசகர் காவிரிமைந்தன் வரவேற்றார். மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் தலைமையுரை நிகழ்த்தி, தமிழ்த்தேரின் முதல் அச்சுப்பிரதியை வெளியிட, முஸ்தஃபா பெற்றுக் கொண்டார்.

 

தமிழ்த்துளி' அமைப்பின் நிறுவனர் ப்ரியா, குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வி போதிப்பதின் அவசியம் பற்றி உரையாற்றினார். ஈடிஏ அஸ்கான் நிர்வாக இயக்குநர் அலுவலக மேளாலர் மீரான் இப்பணிக்கான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.<br>வானலை வளர்தமிழின் உறுப்பினர் அதிரை இளையசாகுலின் முதல் கவிதைத் தொகுப்பு (அவளுக்கும் உண்டு உணர்வுகள்) வெளியிடப்பட்டது. நிறைவாக தந்திரக் கலைஞர் வைக்கோம் ஷாவின் தந்திரக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. துணைத்தலைவர் ஜியாவுத்தீன் நன்றி கூறினார்.

 

விழா ஏற்பாடுகளை கீழை ராஸா, சிம்மபாரதி, லஷ்மி நாராயணன், முகவை முகில், ஆனந்தன், ஆதி பழனி, தண்டலம் பழனி ஆகியோர் செய்திருந்தனர்

நமது செய்தியாளர்

முதுவை ஹிதாயத்

ஐக்கிய அரபு குடியரசில் அல் பார்ஷா நகரில் அல் நூர் பயிற்சி மையத்தில் 25ம் தேதி குழந்தைகள் திருவிழா

அல் பார்ஷா: ஐக்கிய அரபு குடியரசில் அல் பார்ஷா நகரில் அல் நூர் பயிற்சி மையத்தில் 25ம் தேதி குழந்தைகள் திருவிழா நடைபெற உள்ளது. யுஏஇ தமிழ்ச் சங்க ஆதரவுடன் நடைபெறும் இதற்கான அனுமதி இலவசம். இதில் நீங்கள் விரும்பிய பொருட்களை எடுத்துக் கொண்டு நீங்கள் விரும்பிய தொகையைக் கொடுக்கலாம்.. மெகந்தி, முகச்சாயம் பூசப்படும்.

 

ஆனால் இதற்கான மெகந்தி மற்றும் முகச் சாயத்‌தை நீங்களே கொண்டு வர வேண்டும். அனைத்து தரப்பினரும் பங்கேற்க கூடிய விளையாட்டுகளும் இடம் பெறும். சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான அல் நூர் மையம் கடந்த 20 ஆண்டாக செயல்படடு வருகிறது. இதன் வளர்ச்சிக்காக ஐக்கிய அரபு குடியரசு மற்றும் துபாய் ஆட்சியாளர்கள் பெரும் உதவி செய்துள்ளனர்.

 

ரமேஷ் விஸ்வநாதன்,

யுஏஇ தமிழ்ச் சங்கத் தலைவர்

Friday, February 11, 2011

துபாய்க்கு பிப்ரவரி 09ம் தேதியன்று ந‌ண்ப‌க‌ல் வ‌ருகை புரிந்த‌ ம‌த்திய‌ ச‌மூக‌நீதி ம‌ற்றும் அதிகார‌ம‌ளிப்புத்துறை அமைச்ச‌ர் நெப்போலிய‌னுக்கு த‌மிழ் அமைப்புக‌ளின் சார்பில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து






துபாய் : துபாய்க்கு பிப்ரவரி 09ம் தேதியன்று ந‌ண்ப‌க‌ல் வ‌ருகை புரிந்த‌ ம‌த்திய‌ ச‌மூக‌நீதி ம‌ற்றும் அதிகார‌ம‌ளிப்புத்துறை அமைச்ச‌ர் நெப்போலிய‌னுக்கு த‌மிழ் அமைப்புக‌ளின் சார்பில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இந்நிக‌ழ்வில் ஈடிஏ அஸ்கான் மேலாள‌ர் முஹ‌ம்ம‌து மீரான், அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வை ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், அமீர‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் அமைப்பின் த‌லைவ‌ர் அமுத‌ர‌ச‌ன், வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் செய‌லாள‌ர் ந‌ர‌சிம்ம‌ராஜா, ஸ்ப‌ர்ஜ‌ன், நூருல்லாஹ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

த‌ன‌க்கு வ‌ர‌வேற்ப‌ளித்த‌ அனைவருக்கும் ந‌ன்றி தெரிவித்துக்கொண்டார். த‌னிப்ப‌ட்ட‌ ப‌ய‌ண‌மாக‌ குடும்ப‌த்தின‌ருட‌ன் ஓரிரு நாட்க‌ள் அமீர‌க‌த்தில் த‌ங்கியிருப்பார்.

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

Wednesday, February 9, 2011

யு.ஏ.இ.,யில் வாழும் வி.களத்தூர் மக்கள் பங்கேற்ற பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சி

யு.ஏ.இ.,யில் வாழும் வி.களத்தூர் மக்கள் பங்கேற்ற பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சி துபாயில் உள்ள முஷ்ரப் பார்க்கில் ஜனவரி 28ம் தேதியன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

யு.ஏ.இ.,ல் உள்ள 7 மாநிலங்களில் இருந்தும் வி.களத்தூரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஹச்.சர்புதீன், ஏ.சேட் ஷர்புதீன், ஏ.சாகுல் ஹமீது, எஸ்.அபூசாலிஹ், திருச்சி ஜாகீர் உசேன், எம்.கமால் பாஷா மற்றும் ஐஎம்சிடி உறுப்பினர்கள், புஷ்ரா அமைப்பினர், வி.களத்தூர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் வெகு சிறப்பாக செய்திருந்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களும், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன

 

நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

Tuesday, February 8, 2011

சுடர்வம்சத்திற்காக அதனுடன் இணைந்து வானலை வளர்தமிழும் உங்களை அன்போடு அழைக்கிறது

From: Narasimma Raja >
Date: Tue, Feb 8, 2011 at 4:10 PM
Subject: Fwd: Sudarvamsam's Cultural and Book release programme
To:
சுடர்வம்சத்திற்காக அதனுடன் இணைந்து வானலை வளர்தமிழும் உங்களை அன்போடு அழைக்கிறது.

Dear Friends Vannakkam.

 

By God's Grace Sudarvamsam's Cultural and Book release programme on 5.00pm, 11th Feb 2011

at Canadian University Theatre.


Please find our invitation Cultural and Book release programme of Sudarvamsam.

 

All are join with us - enjoy and Support

 

God Bless

Warm Regards
Raghuraj
Sudarvamsam

Monday, February 7, 2011

அபுதாபியில் ஜனவரி 21ம் தேதியன்று 'பாரதி நட்புக்காக' அமைப்பின் சார்பில் தமிழர் திருநாள்'

அபுதாபி : அபுதாபியில் ஜனவரி 21ம் தேதியன்று 'பாரதி நட்புக்காக' அமைப்பின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.

 

ஆஷா நாயர் குழுவினரின் இரண்டு நடனங்கள் நடந்தது. அதில் அந்தக் காலத்தில் கொண்டாடியப் பொங்கல் மற்றும் இந்த அவசர யுகத்தில் கொண்டாடும் பொங்கல் என வித்தியாசமாக அமைத்திருந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பின்னர் நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் 'மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்திற்கு முன்பா... திருமணத்திற்கு பின்பா...'என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது.

 

இதில் மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என்னவென்றால் என்றுமே மழைப்பெய்யாத அபுதாபி நகரத்தில் அன்றைய தினம் காலையிலிருந்து இரவு வரை மழை கொட்டித் தீர்த்தது.அந்த அடாத மழையிலும் நம்மக்கள் பெருந்திரளாக வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தது 'பாரதி நட்புக்காக' அமைப்பின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையே என்பது மிகவும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

 

நம்மக்களின் நம்பிக்கைக்கு சிறிதும் பங்கம் வராமல் 'பாரதி நட்புக்காக' அமைப்பினர்கள் நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தினார்கள்.அதிலும் நம் நகைச்சுவைத் தென்றல் லியோனியின் நகைச்சுவைக் கலந்தப்பேச்சால் அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.அன்றையப்பொழுது வெளியில் மழையையும்,அரங்கத்திற்குள் சிரிப்புமழையையும் கொண்டப் பொழுதாக அமீரகம் வாழ மக்களுக்கு மனதில் சந்தோசம் தரும் இனிய நாளாக அமைந்தது

Nandri : ரமேஷ் விஸ்வநாதன் and www.dinamalar.com

 

VISIT OUR BLOG

FOR REGULAR UPDATES HTTP://GULFTAMILNANBARKAL.BLOGSPOT.COM

 

Saturday, February 5, 2011

அபுதாபியில் உள்ள 'அபுதாபி நண்பர்கள் குழு' சார்பில் 2011 புது வருட கொண்டாட்டம்












அபுதாபி : அபுதாபியில் உள்ள 'அபுதாபி நண்பர்கள் குழு' சார்பில் 2011 புது வருட கொண்டாட்டம், குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் அபுதாபி நண்பர்கள் குழு குடும்ப விழா என மூப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. ஜனவரி 28ம் தேதியன்று இனிய மாலை பொழுதில் அபுதாபி நண்பர்கள் குழுவின் ‘இனிய இதயங்கள் சங்கமம் 2011’ நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. அமைப்பின் பொறுப்பாளர்கள் கிருஷ்ணா, சிதம்பரநாதன், சுனில், ஸ்ரீராம் ஆகியோர் குத்து விளக்கை ஏற்றி வைக்க தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தியாகராஜா வாழ்த்துரை வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு அபுதாபி நண்பர்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து சிறப்பித்தனர். குழந்தைகள், ஆடவரின் நடனங்கள் மற்றும் பாடல்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு 'செம்மொழியான தமிழ்மொழியம்' பாடலுக்கு குழந்தைகள் நடனம் ஆடி தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தினர். வெளிநாட்டிற்கு பணம் சம்பாதிக்க செல்லும் இந்தியர்களுக்கு நமது பாரத மாதாவின் வேதனையை எடுத்துரைக்கும் விதமாக கிருஷ்ணாவின் மௌன நாடகம் அரங்கேற்றபட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

ஆடவர் மற்றும் பெண்களின் கருத்து மிகுந்த நாடகங்கள் மற்றும் பட்டிமன்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை இரவு விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள ஒரு கண் பார்வையற்ற குழந்தைகள் பள்ளிக்கு நன்கொடை வசூல் செய்யப்பட்டது. 2010ம் ஆண்டில் அபுதாபி நண்பர்கள் குழுவின் வளர்ச்சிக்கு பணியாற்றிய அனைவரையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் கலந்து கொண்டு சிறப்பித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நண்பர்கள் குழுவினர் சிறப்பாக கவனித்து கொண்டனர். விழாவினை ஆனந்த் அண்ணாமலை மற்றும் ஆனந்த்குமார் ஆகியோர் அருமையாக தொகுத்து வழங்கினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவின் முடிவில் நமது இந்திய தேசிய கீதம் முழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

தினமலர் வாசகர் சிதம்


nandri : www.dinamalar.com

Thursday, February 3, 2011

குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஜனவரி 21ம் தேதியன்று பொங்கல் திருநாள்


குவைத் : குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஜனவரி 21ம் தேதியன்று பொங்கல் திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 1200 இந்தியர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்ட இவ்விழாவில் குவைத்திற்கான இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பொங்கல் விழா கொண்டாடட்டத்தின் ஒரு பகுதியாக குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குவைத் தமிழ்ச் சங்கத்தின் 5வது ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது, விழாவின் உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

சுமார் 3 மணிநேரம் இடைவிடாது இசை விருந்தளித்த இன்னிசை நிகழ்ச்சியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அமைந்த திரையிசைப் பாடல்களும், அவற்றிற்கு நடனங்களும் இடம்பெற்றன. சென்னையிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட சுசித்ரா கார்த்திக்கின் இசை கச்சேரி அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. நீலிமா மற்றும் பூர்ணிமா சகோதரிகள் இனிய குரலில் பாடி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர். சென்னையில் இருந்து வந்த சின்னத்திரை கலைஞர்கள் ராஜ்குமார், பிரியதர்ஷினி, சுரேஷ்வர் உள்ளிட்ட கலைஞர்கள் வழங்கிய நடனங்களும், பாடல்களும் பார்வையாளர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.
- தினமலர் வாசகர் எஸ்.செல்லத்துரை

ரியாத் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழா


ரியாத் : ரியாத் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழா ஜனவரி 27ம் தேதியன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. ஆண்களுக்காக உறியடித்தல், தொடர் ஓட்டம், ரொட்டி உண்ணுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும், பெண்களுக்காக கோலப்போட்டி, மாலை வடிவமைத்தல் மற்றும் குழந்தைகளுக்காக குறுஞ்செய்தி அனுப்புதல், ஊசியில் நூல் கோர்த்தல், பந்துகள் எடுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. தமிழ் அறிவுத்திறன் போட்டிகளும் நடைபெற்றன. காலை உணவு மற்றும் மதிய உணவின் போது பாரம்பரிய முறைப்படி பொங்கல் வழங்கப்பட்டது. மாலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா கரகாட்டம், பாம்பாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று தொடர்ந்தது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.ரியாத் வாழ் குடும்பத்தினர் மற்றும் தனி நபர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தினமலர் வாசகர் இ.அழகப்பன்

துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க குடும்ப அங்கத்தினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க குடும்ப அங்கத்தினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 21ம் தேதியன்று ஜுமைரா கடற்கரை பூங்காவில் இவ்வருடத்தின் முதல் நிகழ்வாக நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்ப சகிதம் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். இதமான தட்பவெப்பநிலையில் பெரியவர்களும் சிறுவர்கள் போன்ற தங்களது இளமைக்கால நிகழ்வுக்கே சென்று விட்டனர். கோ கோ, டக் ஆஃப் வார், கெட் த குரூப் எனப் பல்வேறு குழு விளையாட்டுக்கள் நடைபெற்றன. விலங்குகளைப் போன்று ஒலி எழுப்பி அதுபோன்றே நடந்து கொண்டு விளையாடியது அனைவரையும் கவர்ந்தது. டக் ஆஃப் வார் விளையாட்டின் போது கயிறு அறுந்தது அதிர்ச்சியடைய வைத்தது. அனைவருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நாள் பொழுதை இன்ப மயமாகக் கழித்த பின்னர் மாலையில் அனைவரும் நீங்கா நினைவுடன் பிரியா விடைபெற்றனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்ப் பெண்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் வாசகி மீனாகுமாரி

அமீரகத்தில் தமிழர் திருவிழா


துபாய் : அமீரகத் தமிழர்கள் அமைப்பு பெருமையுடன் கொண்டாடிய தமிழர் திருவிழா ஜனவரி 28ம் தேதியன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில் விழா சரியாக 6.10க்கு தொடங்கியது. முதலில் நிவேதிதா ஆனந்தனின் தமிழ்த்தாய் வாழ்த்து , பிரித்திகா அன்பழகன் அமீரக தேசியகீதம் பாட விழா களை கட்ட தொடங்கியது.

அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சிறப்பு பாடல் ஒலிப்பரப்புடன், நிவேதிதா மற்றும் குழந்தைகள் குழுவினரின் செம்மொழிப் பாடல் நடனம் மிக நேர்த்தியாக நடந்தது. அதனை தொடர்ந்து தாயகத்திலிருந்து வந்திருந்த நடிகை மற்றும் தொகுப்பாளினி நீலிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மேடையேற, இளைய சமுதாயத்தின் கரவோசை அரங்கை அதிர வைத்தது.தொடர்ந்து ராஸ் மீடியா நடனக் குழுவினரின் நடன நிகழ்ச்சி, வந்திருந்தவர்களை கைத்தட்டி உற்சாகம் செய்ய செய்தது. பின்னர் எமிட்டா குழுவினரின் சிலம்பாட்டம், வாள் சண்டை, ஸ்ரீவித்யா கீபோர்டு இசை செவிக்கு உணவளிக்க, சிறப்பு விருந்தினர்கள் மேடையேறினர். அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முனைவர்.பர்வீன் சுல்தானா, வழக்குரைஞர் சுமதி, மைனா திரைப்பட நடிகை அமலா பால், சுபஸ்ரீ தணிகாசலம் மற்றும் ஈ.டி.ஏ. மெல்கோ இயக்குனர் அஹமது மீரான் மற்றும் நூர் அல் தீன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நூர்தீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அமுதரசன் தனது வரவேற்புரையில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் மகளிர் அணியை அறிமுகம் செய்து வைத்தார்.

வழக்குரைஞர் சுமதி, முனைவர். பர்வீன் சுல்தானா, சுபஸ்ரீ தணிகாசலம், ஈ.டி.ஏ. மெல்கோ இயக்குனர் அஹமது மீரான் மற்றும் நூர் அல் தீன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நூர்தீன் ஆகியோர் அமைப்பின் செயல்பாடுகளை பாராட்டி பேசினர் . சில நிமிடங்கள் தமிழில் உரையாடிய மைனா திரைப்பட நாயகி அமலா பால், ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க மேடையில் நடனம் ஆடினார். பின்னர் மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்து மகளிர் பிரிவு செயலாளர் அமிர்தா எடுத்துரைத்து மகளிர் பிரிவு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். அமீரகத்தில் முதன்முறையாக ஆடுதுறை அழகு.பன்னீர் செல்வத்தின் பாட்டு மன்றம் களைக் கட்டியது. நடுவரின் நகைச்சுவையான பேச்சு குழுமியிருந்தவர்களை கவர்ந்திழுத்தது. நள்ளிரவு கடந்தும் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சி என்ற பெருமையை அமீரகத் தமிழர்கள் அமைப்பு தட்டிச்சென்றது. தாயகத்திலிருந்து வந்திருந்த ராஜபாளையம் சொக்கனாதன்புதூர் கனகராஜ், கடைசிவரை ரசிகனாகவே அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.


குலுக்கல் முறையில் பிரிண்டர், டி.வி.டி. பிளேயர், மொபைல் போன், டி.வி., ஆகியன வழங்கப்பெற்று, நள்ளிரவு 12.40மணிக்கு மகளிர் அணி செயலாளர் அமிர்தாவின் நன்றியுடன் முடிவடைந்தது. 1000க்கும் அதிகமான தமிழர்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் குழுவினர் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகளுக்கு பொன்னாடைப் போர்த்தி சிறப்புச் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணைச்செயலாளர் முஸ்தாக், பொருளாளர் நயீம், இணை பொருளாளர் லஷ்மி நாராயணன், கலைச்செயலாளர் சிம்மபாரதி, ஒருங்கிணைப்பாளர் சலீம், நிறுவன உறுப்பினர் அன்பழகன் மற்றும் உறுப்பினர்கள் முகவை ராஜா, மதுக்கூர். ரூமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். ஒலி,ஒளி அமைப்பை கீழை.ராஸாகான் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.

NANDRI: WWW.DINAMALAR.COM
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons