Google Plus LinkedIn Email
Showing posts with label Gulf Tamil Nanbarkal. Show all posts
Showing posts with label Gulf Tamil Nanbarkal. Show all posts

Tuesday, March 29, 2011

Our Blog & Social Network Details Video

Thursday, February 17, 2011

குவைத் காயிதே மில்லத் பேரவை சிறப்புக் கூட்டம்



குவைத்: குவைத் காயிதே மில்லத் பேரவை சிறப்புக் கூட்டம் குவைத் மிர்காப் தஞ்சை ஹோட்டலில் சிராஜீல் மில்லத் அரங்கில் காயிதே மில்லத் பேரவை குவைத் சார்பாக புதிய நிர்வாகிகள், உறுப்பினர்கள்அடையாள அட்டை வழங்குதல், கலந்துரையாடல் நிகழ்வுகள் கூட்டம் நடைபெற்றது.

பேரவை தலைவர் முஹம்மது பந்தூர் ஆர்.எம்.முஹம்மது பாருக் தலைமை தாங்கினார். மார்க்கப் பிரிவு செயலாளர் வல்லம் நாசர் சாதிக் ரப்பானி கிராத் ஒதி தொடங்கி வைத்தார். திருமங்கலக்குடி அப்துற்ரஹிம் வரவேற்றார். பேரவை ஆலோசகர் கூத்தாநல்லுர் என்.ஏ.எம்.அப்துல் அலிம், டி.வி.எஸ்.அலாவுதின் ஆகியோர் பேசினர்.

முஸ்லிம் லீக் மாநில மாநாட்டு தீர்மானங்கள் மற்றும் மஹல்லா ஜமாத் மாநாட்டு தீர்மானங்களை இணைச்செயலாளர் சத்திரமனை ஹஸன் முஹம்மது வாசித்தார். பேரவையின் புதிய ஆலோசகர்கள் அறிமுகத்தை தொடர்ந்து, உறுப்பினர்கள் அடையாள அட்டையை பேரவையின் ஆலோசகர் மற்றும் தலைவர் வழங்கினர்.

இணைச் செயலாளர் ஹஸன் முஹம்மது நன்றி கூறினார். பேரவை பெருளாளர் காரைக்கால் எஸ்.எம்.ஆரீப் மரைக்காயர் கூட்ட நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். கூட்டம் மஜ்லிஸ் துவாவுடன் இனிதே நிறைவுற்றது

nandri www.dinamalar.com

Saturday, February 5, 2011

அபுதாபியில் உள்ள 'அபுதாபி நண்பர்கள் குழு' சார்பில் 2011 புது வருட கொண்டாட்டம்












அபுதாபி : அபுதாபியில் உள்ள 'அபுதாபி நண்பர்கள் குழு' சார்பில் 2011 புது வருட கொண்டாட்டம், குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் அபுதாபி நண்பர்கள் குழு குடும்ப விழா என மூப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. ஜனவரி 28ம் தேதியன்று இனிய மாலை பொழுதில் அபுதாபி நண்பர்கள் குழுவின் ‘இனிய இதயங்கள் சங்கமம் 2011’ நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. அமைப்பின் பொறுப்பாளர்கள் கிருஷ்ணா, சிதம்பரநாதன், சுனில், ஸ்ரீராம் ஆகியோர் குத்து விளக்கை ஏற்றி வைக்க தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தியாகராஜா வாழ்த்துரை வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு அபுதாபி நண்பர்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து சிறப்பித்தனர். குழந்தைகள், ஆடவரின் நடனங்கள் மற்றும் பாடல்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு 'செம்மொழியான தமிழ்மொழியம்' பாடலுக்கு குழந்தைகள் நடனம் ஆடி தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தினர். வெளிநாட்டிற்கு பணம் சம்பாதிக்க செல்லும் இந்தியர்களுக்கு நமது பாரத மாதாவின் வேதனையை எடுத்துரைக்கும் விதமாக கிருஷ்ணாவின் மௌன நாடகம் அரங்கேற்றபட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

ஆடவர் மற்றும் பெண்களின் கருத்து மிகுந்த நாடகங்கள் மற்றும் பட்டிமன்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை இரவு விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள ஒரு கண் பார்வையற்ற குழந்தைகள் பள்ளிக்கு நன்கொடை வசூல் செய்யப்பட்டது. 2010ம் ஆண்டில் அபுதாபி நண்பர்கள் குழுவின் வளர்ச்சிக்கு பணியாற்றிய அனைவரையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் கலந்து கொண்டு சிறப்பித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நண்பர்கள் குழுவினர் சிறப்பாக கவனித்து கொண்டனர். விழாவினை ஆனந்த் அண்ணாமலை மற்றும் ஆனந்த்குமார் ஆகியோர் அருமையாக தொகுத்து வழங்கினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவின் முடிவில் நமது இந்திய தேசிய கீதம் முழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

தினமலர் வாசகர் சிதம்


nandri : www.dinamalar.com

Thursday, February 3, 2011

குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஜனவரி 21ம் தேதியன்று பொங்கல் திருநாள்


குவைத் : குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஜனவரி 21ம் தேதியன்று பொங்கல் திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 1200 இந்தியர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்ட இவ்விழாவில் குவைத்திற்கான இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பொங்கல் விழா கொண்டாடட்டத்தின் ஒரு பகுதியாக குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குவைத் தமிழ்ச் சங்கத்தின் 5வது ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது, விழாவின் உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

சுமார் 3 மணிநேரம் இடைவிடாது இசை விருந்தளித்த இன்னிசை நிகழ்ச்சியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அமைந்த திரையிசைப் பாடல்களும், அவற்றிற்கு நடனங்களும் இடம்பெற்றன. சென்னையிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட சுசித்ரா கார்த்திக்கின் இசை கச்சேரி அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. நீலிமா மற்றும் பூர்ணிமா சகோதரிகள் இனிய குரலில் பாடி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர். சென்னையில் இருந்து வந்த சின்னத்திரை கலைஞர்கள் ராஜ்குமார், பிரியதர்ஷினி, சுரேஷ்வர் உள்ளிட்ட கலைஞர்கள் வழங்கிய நடனங்களும், பாடல்களும் பார்வையாளர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.
- தினமலர் வாசகர் எஸ்.செல்லத்துரை

ரியாத் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழா


ரியாத் : ரியாத் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழா ஜனவரி 27ம் தேதியன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. ஆண்களுக்காக உறியடித்தல், தொடர் ஓட்டம், ரொட்டி உண்ணுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும், பெண்களுக்காக கோலப்போட்டி, மாலை வடிவமைத்தல் மற்றும் குழந்தைகளுக்காக குறுஞ்செய்தி அனுப்புதல், ஊசியில் நூல் கோர்த்தல், பந்துகள் எடுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. தமிழ் அறிவுத்திறன் போட்டிகளும் நடைபெற்றன. காலை உணவு மற்றும் மதிய உணவின் போது பாரம்பரிய முறைப்படி பொங்கல் வழங்கப்பட்டது. மாலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா கரகாட்டம், பாம்பாட்டம், தப்பாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று தொடர்ந்தது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.ரியாத் வாழ் குடும்பத்தினர் மற்றும் தனி நபர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தினமலர் வாசகர் இ.அழகப்பன்

துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க குடும்ப அங்கத்தினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க குடும்ப அங்கத்தினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 21ம் தேதியன்று ஜுமைரா கடற்கரை பூங்காவில் இவ்வருடத்தின் முதல் நிகழ்வாக நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்ப சகிதம் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். இதமான தட்பவெப்பநிலையில் பெரியவர்களும் சிறுவர்கள் போன்ற தங்களது இளமைக்கால நிகழ்வுக்கே சென்று விட்டனர். கோ கோ, டக் ஆஃப் வார், கெட் த குரூப் எனப் பல்வேறு குழு விளையாட்டுக்கள் நடைபெற்றன. விலங்குகளைப் போன்று ஒலி எழுப்பி அதுபோன்றே நடந்து கொண்டு விளையாடியது அனைவரையும் கவர்ந்தது. டக் ஆஃப் வார் விளையாட்டின் போது கயிறு அறுந்தது அதிர்ச்சியடைய வைத்தது. அனைவருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நாள் பொழுதை இன்ப மயமாகக் கழித்த பின்னர் மாலையில் அனைவரும் நீங்கா நினைவுடன் பிரியா விடைபெற்றனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்ப் பெண்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் வாசகி மீனாகுமாரி

அமீரகத்தில் தமிழர் திருவிழா


துபாய் : அமீரகத் தமிழர்கள் அமைப்பு பெருமையுடன் கொண்டாடிய தமிழர் திருவிழா ஜனவரி 28ம் தேதியன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில் விழா சரியாக 6.10க்கு தொடங்கியது. முதலில் நிவேதிதா ஆனந்தனின் தமிழ்த்தாய் வாழ்த்து , பிரித்திகா அன்பழகன் அமீரக தேசியகீதம் பாட விழா களை கட்ட தொடங்கியது.

அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சிறப்பு பாடல் ஒலிப்பரப்புடன், நிவேதிதா மற்றும் குழந்தைகள் குழுவினரின் செம்மொழிப் பாடல் நடனம் மிக நேர்த்தியாக நடந்தது. அதனை தொடர்ந்து தாயகத்திலிருந்து வந்திருந்த நடிகை மற்றும் தொகுப்பாளினி நீலிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மேடையேற, இளைய சமுதாயத்தின் கரவோசை அரங்கை அதிர வைத்தது.தொடர்ந்து ராஸ் மீடியா நடனக் குழுவினரின் நடன நிகழ்ச்சி, வந்திருந்தவர்களை கைத்தட்டி உற்சாகம் செய்ய செய்தது. பின்னர் எமிட்டா குழுவினரின் சிலம்பாட்டம், வாள் சண்டை, ஸ்ரீவித்யா கீபோர்டு இசை செவிக்கு உணவளிக்க, சிறப்பு விருந்தினர்கள் மேடையேறினர். அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முனைவர்.பர்வீன் சுல்தானா, வழக்குரைஞர் சுமதி, மைனா திரைப்பட நடிகை அமலா பால், சுபஸ்ரீ தணிகாசலம் மற்றும் ஈ.டி.ஏ. மெல்கோ இயக்குனர் அஹமது மீரான் மற்றும் நூர் அல் தீன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நூர்தீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அமுதரசன் தனது வரவேற்புரையில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் மகளிர் அணியை அறிமுகம் செய்து வைத்தார்.

வழக்குரைஞர் சுமதி, முனைவர். பர்வீன் சுல்தானா, சுபஸ்ரீ தணிகாசலம், ஈ.டி.ஏ. மெல்கோ இயக்குனர் அஹமது மீரான் மற்றும் நூர் அல் தீன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நூர்தீன் ஆகியோர் அமைப்பின் செயல்பாடுகளை பாராட்டி பேசினர் . சில நிமிடங்கள் தமிழில் உரையாடிய மைனா திரைப்பட நாயகி அமலா பால், ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க மேடையில் நடனம் ஆடினார். பின்னர் மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்து மகளிர் பிரிவு செயலாளர் அமிர்தா எடுத்துரைத்து மகளிர் பிரிவு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். அமீரகத்தில் முதன்முறையாக ஆடுதுறை அழகு.பன்னீர் செல்வத்தின் பாட்டு மன்றம் களைக் கட்டியது. நடுவரின் நகைச்சுவையான பேச்சு குழுமியிருந்தவர்களை கவர்ந்திழுத்தது. நள்ளிரவு கடந்தும் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சி என்ற பெருமையை அமீரகத் தமிழர்கள் அமைப்பு தட்டிச்சென்றது. தாயகத்திலிருந்து வந்திருந்த ராஜபாளையம் சொக்கனாதன்புதூர் கனகராஜ், கடைசிவரை ரசிகனாகவே அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.


குலுக்கல் முறையில் பிரிண்டர், டி.வி.டி. பிளேயர், மொபைல் போன், டி.வி., ஆகியன வழங்கப்பெற்று, நள்ளிரவு 12.40மணிக்கு மகளிர் அணி செயலாளர் அமிர்தாவின் நன்றியுடன் முடிவடைந்தது. 1000க்கும் அதிகமான தமிழர்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் குழுவினர் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகளுக்கு பொன்னாடைப் போர்த்தி சிறப்புச் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணைச்செயலாளர் முஸ்தாக், பொருளாளர் நயீம், இணை பொருளாளர் லஷ்மி நாராயணன், கலைச்செயலாளர் சிம்மபாரதி, ஒருங்கிணைப்பாளர் சலீம், நிறுவன உறுப்பினர் அன்பழகன் மற்றும் உறுப்பினர்கள் முகவை ராஜா, மதுக்கூர். ரூமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். ஒலி,ஒளி அமைப்பை கீழை.ராஸாகான் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.

NANDRI: WWW.DINAMALAR.COM
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

Thursday, September 9, 2010

Eid Mubarak





Monday, August 9, 2010

The Amul Vidya Shree Award


The Amul Vidya Shree Award

Amul takes immense pleasure in presenting ‘The Amul Vidya Shree Award’, India’s first of its kind award that recognises and rewards Standard X toppers across India.

The awards are:

* Memento

* Citation

* A Gift hamper of books

The winner will be featured in one of India’s leading newspaper and will get national recognition.



Terms and Conditions:

Application for Awards must be made by the Principal of the school as per the application form.

* To be eligible for the Amul Vidya Shree Award, the student must have passed Std.10 in the academic year 2009-10 at the State or Central Board Examinations in any medium and must have scored the highest aggregate marks in the school.

* Online application entries should be done by 10th August, 2010.

* From the entries received, students scoring the highest aggregate marks will be selected for the Awards.

The decision of GCMMF Ltd., Anand will be final in all matters as regards this Award.



More Details please visit :www.amul.com



 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons