Thursday, October 20, 2011
வாங்க வந்து கலக்குங்க எமது யாஹூ குழுமத்தில் (Mail to gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com)
Tuesday, October 18, 2011
நண்பர் திரு. கந்தநாதன் அவர்களின் கவிதை
வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் அமைப்பிலே
வளைய வளைய வரும் செய்திகள் சுவையிலே
எளிதாய் பல விஷயங்கள் ஏறுதே என் மனத்திலே
களிப்பாய் நாளும் அது கற்கண்டு நடை போடுதே!
விழிப்பைத் தரும் விஷயங்களும் பல இதிலுண்டு!
வியப்பைத் தரும் பல செய்திகளும் இதிலடக்கம்!
மொழியைச் செப்பனிடும் முயற்சியும் இதிலுண்டு!
முகத்தில் புன்சிரிப்பைத் தரும் கவர்ச்சியும் உண்டு!
நாட்டு நடப்புகளைப் பெட்டிக்குள் தரும் பொக்கிஷம்
வீட்டுப் பயன்களை விந்தையாக்கும் விசித்திரம்!
மேடுபள்ளம் இதிலில்லை! பாலைநிலத்து முல்லை!
வீட்டு நினைவுகூட இதனால் சமயத்தில் வருவதில்லை!
தமிழனென்ற உணர்வும் தமிழ்மொழியின் சிறப்பும்
அமிழ்தமெனப் பொங்க அரபு நிலத்தில் நிலைக்க
இமியளவும் சுவையது குறையாமல் தொடர
புவியிதனில் பல்லோரும் மகிழ வாழ்த்துக்கள்!
நன்றி : திரு. கந்தநாதன்
Thursday, October 6, 2011
அக். 8ல் துபாயில் வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்
துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் 'வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல்' எனும் சிறப்புக் கருத்தரங்கினை 08.10.2011 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு அல் முத்தீனா துபாய் இந்தியன் இஸ்லாமிக் செண்டர் அரங்கில் நடத்த இருக்கிறது என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் தெரிவித்தார்.
இக்கருத்தரஙகை குளோபல் சக்ஸஸ் சிஸ்டம்ஸ் இயக்குநரும், முதன்மை ஆலோசகருமான ஸ்ரீசித் ராதாகிருஷ்ணன் நடத்துகிறார்.
இக்கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் சையது முஹம்மது சாதிக் தலைமை வகிக்கிறார்.
கருத்தரங்கில் முன்னாள் மாணவர்கள் மட்டுமன்றி அனைவரும் பங்கேற்கலாம். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
முன்பதிவு செய்திட 050-5489609/050-5356650 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Sunday, October 2, 2011
துபாயில் 2 ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
துபாய் தமிழ்ச் சங்கத்தில் காந்தி ஜெயந்தி விழா