Google Plus LinkedIn Email

Tuesday, October 18, 2011

நண்பர் திரு. கந்தநாதன் அவர்களின் கவிதை

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் அமைப்பிலே

வளைய வளைய வரும் செய்திகள் சுவையிலே

 

எளிதாய் பல விஷயங்கள் ஏறுதே என் மனத்திலே

களிப்பாய் நாளும் அது கற்கண்டு நடை போடுதே!

 

விழிப்பைத் தரும் விஷயங்களும் பல இதிலுண்டு!

வியப்பைத் தரும் பல செய்திகளும் இதிலடக்கம்!

 

மொழியைச் செப்பனிடும் முயற்சியும் இதிலுண்டு!

முகத்தில் புன்சிரிப்பைத் தரும் கவர்ச்சியும் உண்டு!

 

நாட்டு நடப்புகளைப் பெட்டிக்குள் தரும் பொக்கிஷம்

வீட்டுப் பயன்களை விந்தையாக்கும் விசித்திரம்!

 

மேடுபள்ளம் இதிலில்லை! பாலைநிலத்து முல்லை!

வீட்டு நினைவுகூட இதனால் சமயத்தில் வருவதில்லை!

 

தமிழனென்ற உணர்வும் தமிழ்மொழியின் சிறப்பும்

அமிழ்தமெனப் பொங்க அரபு நிலத்தில் நிலைக்க

 

இமியளவும் சுவையது குறையாமல் தொடர

புவியிதனில் பல்லோரும் மகிழ வாழ்த்துக்கள்!

 

நன்றி : திரு. கந்தநாதன்

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons