Google Plus LinkedIn Email

Thursday, October 6, 2011

அக். 8ல் துபாயில் வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்

 

துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் 'வாழ்வின் வெற்றிக்கான திறவுகோல்' எனும் சிறப்புக் கருத்தரங்கினை 08.10.2011 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு அல் முத்தீனா துபாய் இந்தியன் இஸ்லாமிக் செண்டர் அரங்கில் நடத்த இருக்கிறது என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் தெரிவித்தார்.

 

இக்கருத்தரஙகை குளோபல் சக்ஸஸ் சிஸ்டம்ஸ் இயக்குநரும், முதன்மை ஆலோசகருமான ஸ்ரீசித் ராதாகிருஷ்ணன் நடத்துகிறார்.

 

இக்கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் சையது முஹம்மது சாதிக் தலைமை வகிக்கிறார்.

 

கருத்தரங்கில் முன்னாள் மாணவர்கள் மட்டுமன்றி அனைவரும் பங்கேற்கலாம். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

 

முன்பதிவு செய்திட 050-5489609/050-5356650 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons