Google Plus LinkedIn Email

Thursday, March 18, 2010

பயணம்



காவிரியும் பெரியாறும்
கை விட்ட தமிழன்

கனவும் கற்பனையுமாய்
காணா பொன்தேடி

ஏகாந்த விடுமுறையில்
பூட்டிய உள்ளறையில்
தொலைக்காட்சி உற்ற தோழனாக
சிந்தையை நிரப்பிடினும்

மாற்றம் தேடுவது மனித இயல்பு
மாறும் பாலைவனத்தின்
மாறா எழிலை தரிசிக்க
ஆகர்ஷணம் ஆபத்தா ?

வழிதொலைந்த பயணத்தின்
வாகனமும் உடன் வரமறுக்க
எரிக்கும் சூரியனின்

கொதிக்கும் தாயாக பூமியும்
தாகமே தலை காலாக
எப்போதோ பருகிய நீர்
சற்றேனும் இப்போது

தாகசாந்தியாக மறுக்க
கானல் நீர் கூட காத தூரத்தில்
கலைந்து கொண்டே இருக்க
எல்லாமே கைவிட்ட என்னை
ஏற்றுக்கொள்ள மரணம் மட்டும்

நன்றியுடன், குளச்சல். மலுக்கு.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons