Google Plus LinkedIn Email

Friday, March 25, 2011

அபுதாபியில் இசை வடிவில் திருக்குறள்

அபுதாபி : பிரபல பின்னணி இசை அமைப்பாளர் பரத்வாஜ் தமிழ் பொதுமறை திருக்குறளுக்கு இசையமைக்கும் முயற்ச்சியில்.ஈடுபட்டுள்ளார். அவர் இசையமைத்து வரும் திருவள்ளுவரின் 1330 குரளுக்கும் உலகெங்கும் உள்ள 1330 பாடகர்களைக் கொண்டு பாடவைக்கும் ஒரு மாபெரும் முயற்ச்சியில் இறங்கி உள்ளார்.

 

இதன் முதற்கட்ட ஆயத்தப்பணிகளை அபுதாபி 'பாரதி நட்புக்காக' அமைப்புடன் இணைந்து கடந்த 10ம் தேதி தொடங்கியுள்ளார். அபுதாபி வந்திருந்த பரத்வாஜ்க்கு 'பாரதி நட்புக்காக' அமைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன்,செயலாளர் ஹலீல் ரஹ்மான், நிறுவனர் ஜெகன்னாதன் மற்றும் செயற்குழு அங்கத்தினர்களும் சிறப்பான முறையில் வரவேற்பளித்தனர், இந்தியத் தூதரகத்தைச சேர்ந்த டாக்டர் இளங்கோவன் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இசையமைத்ததுடன் பரத்வாஜ்க்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

 

NANDRI : தினமலர் & ரமேஷ் விஸ்வநாதன் – UAE TAMIL SANGAM

 

 

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons