Google Plus LinkedIn Email

Wednesday, March 17, 2010

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!

புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!

அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!


நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!


முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!


எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!


பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாலாய்ப்போன வெளி நாடு!!


பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!


வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!


கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!


துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;


உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

குறிப்பு : இந்த கவிதையை எழுதிய நண்பருக்கு நன்றி. எழுதிய நண்பரின் பெயர் தெரியவில்லை அதனால் அவரின் பெயரை குறிப்பிட முடியவில்லை. இதை அனுப்பிவைத்த நண்பன் ஹுசைனுக்கு நன்றி.

3 comments:

Essar Green World said...

மங்கையின் குமுறல்.......ந‌ன்றி......

Unknown said...

hai this site very nice, i am sheik we are provide online service live www.liveibc.com

Anonymous said...

very nice

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons